படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அறுத்து பலியிடும் திருநாள்!




நினைத்துப் பார்க்கையிலே ...........
நனைந்துப் போகும்
விழிகள்;
காலம் கடந்துப் போனாலும்

தியாகம்!

இறைக் கொடுத்த
வஹிக்கு;
பலிக் கொடுக்கச் சென்று;
வரலாற்றில் பதிக்கப்பட்ட
தியாகம்!


பெற்றெடுத்தப் பிள்ளையை
விட்டுக் கொடுத்த மாண்பு;
துணிந்தப் போதும்
தணிக்கைச் செய்த
அல்லாஹ்வின் அன்பு!


வெற்றிப்பெற்றச் சோதனைக்கு
இன்னும் ஒரு பெருநாள்;
தியாகத்தை நினைத்துப் பார்க்க
அறுத்து பலியிடும் திருநாள்!


முகம் ஒளிர ; அகம் மலர
வாழ்த்துக்கள் பரிமாற்றம்;
புத்தாடைகளும் இனிப்புகளும்
காட்டட்டும் புதுத் தோற்றம்!


கசப்புகளைக் கசக்கிவிட்டு;
வெறுப்புகளை உமிழ்ந்துவிட்டு;
முத்தமிட்டு அணைப்போம்
சகோதரனை!
எட்டுத் திக்கும் தெரியட்டும்
நம் தோரணை!
"அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு "பிர்தவ்ஸ்" என்னும் சுவாக்கம் தங்குமிடமாக உள்ளது. அதில் (அவர்கள்) என்றென்றும் நிலைத்திருப்பாகள். அங்கிருந்து (வேறிடம்) திரும்பிச் செல்ல அவர்கள் விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்)



இன்ஷா அல்லாஹ் இந்த திருநாளை மார்கத்தில் சொல்வதற்க்கு இணங்க கொண்டாடி மகிழுங்கள் .
meeran........

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க