படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க!




இன்ப வாழ்வை விரும்பாதவர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன''அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம்கிடைக்க மாட்டேன் என்கிறதே!'' என்று சிலர்அல்ல அல்லபலர் கூக்குரலிடுவது கேட்கத்தானே செய்கிறதுஎன்ன காரணமாக இருக்க முடியும். ''பிரச்சனைதான்''

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம்

வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.


உலக அதிசயங்களுள் ஒன்று!


உலக அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம், வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது.


கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!

` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும்

கொள்ளு! புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது.


பெல்ஜியம் நாட்டில் ஜெயிலில் ஓரின சேர்க்கை ஜோடிக்கு திருமணம்

   நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.(15 .75)    

சிந்திக்கமாட்டீர்களா!!!


லாவென், பெல்ஜியம் நாட்டில் ஓரின சேர்க்கை ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இப்போது அங்குள்ள ஜெயில் ஒன்றிலேயே ஆண் ஓரின சேர்க்கை ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது.

பெல்ஜியம் ஜெயிலில் இருக்கும் ஆண்-பெண் கைதிகள் திருமணம் செய்ய ஏற்கனவே அனுமதி உள்ளது. இதன்படி ஏராளமான கைதிகள் திருமணம் செய்துள்ளனர். இப்போது முதல் முறையாக ஓரின சேர்க்கை திருமணம் நடந்துள்ளது. இங்குள்ள லாவென் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளி ஒருவரும் 3 கொலைகளை செய்து ஆயுள் தண்டனை பெற்ற ஒருவரும் இருந்தனர்.

இருவருக்கும் ஓரின சேர்க்கை தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக ஜெயில் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். அவர்கள் திருமணத்துக்கு அனுமதி கொடுத்தனர். இருவருக்கும் ஜெயில் வளாகத்தில் வைத்து திருமணம் நடந்தது. போதகர் ஒருவர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண ஜோடிகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் .
            ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் தான் தோன்றி தனமாக வாழும்போதும், கட்டுப்பாடு அற்று அனாசாரமான  காரியங்களில் ஈடுபடும்

தொடரும்........2

தொடரும்........3

தொடரும்........4

 இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்!

தலைமைகழக செய்திதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம...

சர்க்கரை நோயால் நீரிழிவு நோயாளிகளுக்கு

காய்கள், கனிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே. இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மனிதர்களின் அன்றாட உணவுத் தேவைகளில் காய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொழுப்புச் சத்து குறைந்த வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள்

நிறைந்தவைதான் காய்கறிகள்.


இவைகளை சமைத்து உண்பதால் உடலுக்கு வலு கிடைக்கும். இவை எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்த இதழில் அனைவருக்கும் பரிச்சயமான வெண்டைக் காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். வெண்டையை ஏழைகளின் நண்பன் என்று கூட சொல்லலாம். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் சேர்க்கும் காயாகும்.

பிள்ளையாறை பார்த்ததுயார் ?

                                                                                                                            மாவட்டத்தின் அன்புவெளிபுரம் என்கிற ஊரில் அண்ணா வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள வளவில் இருந்து விசித்திரமான உருவத்தில் தேங்காய் ஒன்று கிடைக்கப் பெற்று உள்ளது.

பொச்சைடன் கூடிய தேங்காயின் உருவம் பிள்ளையார் போன்று காட்சி அளிக்கின்றது.

மழை காலத்தில் ஏற்படும் சைனஸ் பிரச்சினை தீர்க்க வழிமுறைகள்: நவீன சிகிச்சைகள் விவரம்

பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்து வைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில் தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும்

மேலும் வளரும் பட்சத்தில் அது பல்லின் வேர் வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸ்லரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.


இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடும். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம்.அவர் மேலும் கூறியதாவது:- பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும் போது உஷாராக இல்லை என்றாலும் கஷ்டம் தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக்கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ்.இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டியது இருக்கும்.

ஆனால் சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால் தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை. டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். இதெல்லாம் சாதாரண காரியமில்லை. இப்போது இதற்குப் முற்றுப்புளளி வைக்கும் அளவுக்கு மருத்துவ துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடிகிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பது தான் இப்போதைய நிலை.

சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டி இருக்குமாப அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமாப அதற்கெல்லாம் அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் வாய்வழியாகக் கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாக கிழிக்க வேண்டி இருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாக தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும்.

கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

தொடர் தும்மல்:

ஒவ்வொமை, தூசு இவற்றால் தான் அதிகளவில் திடீரென்று தும்பல் ஏற்படுகிறது. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏ.சியை அடிக்கடி சுத்தப்படுத்தா விட்டாலும் கூட தும்மல் ஏற்படும். சுற்றுப்புற சூழல், சுகாதாரக்கேடு போன்ற வற்றால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு, தும்மல் என்பது நம் மூக்கின் அறைகளில் ஆக்கிரமிக்கும் சில தேவையற்றவைகளை வெளியேற்ற உடல் மேற் கொள்ளும் அனிச்சையான செயல் என்றும் கூட சொல்லலாம்.

சைனஸ் புற்று நோய்:

இந்த சைனஸை தோற்றுவிப்பதே ஜலதோஷம் தான். ஜலதோஷம் என்பது வைரஸ் கிருமிகளின் தாக்குதல். ஜல தோஷத்தால் உண்டாகும் தலைவலி காய்ச்சல், மூக்கடைப்பு போன்றவற்றை கட்டுப் படுத்தி விட்டாலே ஜலதோஷம் கட்டுப்பட்டு விடும். பொதுவாக ஜலதோஷம் மூன்று நாட்களிலிருந்து இரண்டு வாரத்திற்குள் குணமடைந்து விடும். இதை கடந்தும் குணமாகவில்லை என்றால் இது சைனஸ் பிரச்சனை என்ற முடிவுக்கு வரலாம். இதனை கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் கிருமிகள் கலந்து சளி சைனஸ் அறைகளில் தங்கி சீழாக மாறிவிடும். பின்னர் இதுவே சைனஸ் புற்றுநோயாகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. எனவே இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சர் என்ற சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை முறையில் தற்காலிகத் தீர்வே ஏற்பட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டு எண்டாஸ் கோப்பிக் என்ற சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு காயமோ தழும்போ ஏற்படாது. இம்முறை சிகிச்சை பெறுபவர்களுக்கு சைனஸ் தொல்லை மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்ற நிலை உருவானது. தற்போது அதைவிட நவீன சிகிச்சை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. `மைக்ரோ டிப்ரைடர்' என்ற கருவி மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் சைனஸை உருவாக்கும் பாலிப் சதை அகற்றப்படுகிறது.மூக்கு என்பது மிகவும் நுட்பமான சிக்கலான பகுதி என்பதால் மைக்ரோ டிப்ரைடர் கருவி மூலம் சிகிச்சை மேற் கொள்வது அவசியம் என்று கூறலாம்.

நவீன சிகிச்சை:

மூக்கின் அருகில் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கு அடைப்பு உண்டாவதே சைனஸ், மூக்கை இரண்டாகப் பிரிக்கும் விட்டம் நடுவில் இல்லாமல் வளைந்து இருந்தால் சைனஸ் அறைகளில் சளி தேங்கும். சளியில் வளரும் பாக்டீரியா காரணமாக சீழ் உண்டாகி தலைவலி, காய்ச்சல், முக வீக்கம், தொண்டை வீக்கம், காது வலி, காது அடைப்பு உண்டாகும். இதனால் மூக்கில் இருந்து ரத்தத்து டன் சீழ் வடியும் நிலையும் ஏற்படும். இதற்கு கே.டி.பி. 532 லேசர் கருவி மூலம் எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை அல்லது செப்டோபிளாஸ்டி சிகிச்சை பெறலாம். தழும்போ, காயமோ ஏற்படாது. சைனஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையின்றி `பலூன் சைனு பிளாஸ்ட்டி' என்ற அதிநவீன சிகிச்சை முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக எண்டோஸ்கோப்பி மூலம் சைனஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதைக் காட்டிலும் `பலூன் சைனு பிளாஸ்ட்டி' முறை எளிதானது, பாதுகாப்பானது. இந்த வகை சிகிச்சையில் கதீட்டர் குழாய் மூலம் சைனஸ் காற்று அறைகளில் துளைகளை ஏற்படுத்தி, பலூனைச் செலுத்தி காற்று செல்வதற்கு உள்ள நோய்த் தொற்று தடைகள் அகற்ற முடியும். 4 மணி நேரத்தில் சிகிச்சை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம்.

அலர்ஜி:

அலர்ஜி காரணமாக ஏற்படுவது சைனஸ் பிரச்சினை. பொதுவாக மூக்கின் பக்கவாட்டில் சைனஸ் கேவிட்டி எனும் உள் உறுப்பு இருக்கிறது. இதில் காற்று நிரம்பி இருக்கும். இதுதான் மண்டை ஓட்டின் எடையைக் குறைவாக வைத்திருக்க உதவும். இந்த கேவிட்டியினுள் தூசியோ, கிருமி தொற்றோ, நீர் கோர்த்தாலோ இருந்தால்... உடனே சளி பிடிப்பதுடன், தலைவலி, மூக்கடைப்பு ஏற்படும். மூக்கினுள் சதை அதிகமாக வளர்ந்திருந்தாலும் மூக்குத் தண்டு வளைந்திருந்தாலும், குழந்தை மற்றும் நடுத்தர வயதினருக்கு மூக்கின் பின்பக்க சதை வளர்ந்திருந்தாலும் சைனஸ் கேவிட்டினுள் கிருமி தொற்று ஏற்பட்டு, சைனஸ் சிக்கல் உண்டாகும். எனவே மூக்கில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

பாதுகாப்பது எப்படி?

மூக்கை பொறுத்தவரை தண்ணீரை மாற்றி அருந்தினாலோ, குளித்தாலோ ஏற்படும் மூக்கடைப்பை கவனித்துக் கொள்ள வேண்டும். மழையில் நனைந்தாலோ அல்லது பனியில் நனைந்தாலோ முதலில் பாதிக்கப்படுவது மூக்கு தான். அதனால் பருவநிலைக்கு ஏற்ப மூக்கை கவனித்துக் கொள்ள வேண்டும். மூக்குப்பொடி போடுவது முற்றிலும் தவிர்க்கபட வேண்டும். குளிர்பானங்களை பருவக்கூடாது. அதே போல் மிகவும் குளிர்ந்த திரவங் களையும் உட் கொள்ளக்கூடாது. காது,மூக்கு, தொண்டை போன்ற நுட்பமான பகுதியில் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது. மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து பிராணாயாமம் என்கின்ற மூச்சு பயிற்சியும், மற்றும் சில தேவையான உடற்பயிற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும்.

சுகாதாரமற்ற கழிவறைகளால் இந்தியாவில் வேகமாக பரவும் தொற்று நோய்கள்


நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள். 
(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)புகாரி ஹதீஸ் 6322. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.                                                                                                                                                                                                                                                         

மனிதன் மலம், சிறுநீர் மற்றும் கழிவுகளை அகற்றப்பயன்படும் நீர்க்குழாய் ஆகிய தொகுதி கழிவறை அல்லது கக்கூசு எனப்படும். தமிழில் கழிவறை நீர்க்குழாய் இருக்கும் அறையை குறிக்கவே பெரிதும் பயன்படுகின்றது. உடல் கழிவுகளை மலம், சிறுநீர் ஆகிய வற்றை உடலிருந்து அகற்றுவது
மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்று.


அனேக நாடுகளில் கி.பி.1800களுக்கு முன்னர் காட்டுப்புற அல்லது ஒதுக்குபுற இடங்களிலோ மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். 1800 பின்னரே தற்கால முறை நடைமுறைக்கு வந்தது. கழிவுகளை அகற்ற வேண்டிய தேவை 1850 பின்னர் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால் அவற்றின் மூலம் நோய் கிருமிகள் பரவுவது தெரிய வந்தது. கழிவுகளில் நோய் ஆகியவற்றின் தொடர்புகள் நிரூபிக்கப்பட்ட பின், கழிவுகளை குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது தேவையாயிற்று.

தமிழர்களின் வீடுகள் பெரும்பாலும் சூடான வெட்ட வெளி பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் ஒதுங்கு வது இயல்பாக இருந்தது. வெப்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப் பெரிய விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை. தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகள் அதிக அளவில் கட்டப்பட்டன என்றார் சென்னையை சேர்ந்த `மை டாய்லட் கிளீனர்' நிறுவன நிர்வாகி ஜேசுதாஸ்.

இவர் `மை டாய்லட்டே' தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி, மாணவ-மாணவிகள் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பெற கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினார். இவர் பல்வேறு பள்ளி களுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு கழிவறை சுகாதாரம் பற்றி பிரசாரம் செய்து வருகிறார். தொற்று நோய் ஆபத்து ஜேசுதாஸ் கூறும் போது, `நம்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி விஷ காய்ச்சல் ஏற்படு வதற்கு காரணமாகி விடுகிறது. இதனால் உலக கழிவறை தினமான நாளை மக்களுக்கு தேவையான இந்த அடிப்படை வசதிகள் செய்ய மத்திய-மாநில அரசுகள் உறுதி அளிக்க வேண்டும்.

இந்தியா வில் அடிக்கடி தொற்று நோய்கள் பரவுவதற்கு சுகாதாரமற்ற கழிவறைகள் தான் காரணம். அவற்றை சீரமைத்தாலே அரசுக்கு பல கோடி மருத்துவ செலவு மிச்சப்படும். நகர்ப்புறங்களில் உள்ள பொது கழிவறைகள் கிருமிகளை நோய்களை பரப்பும் இடமாக திகழ்கிறது. இதை முழுமையான சுகாதாரமான பகுதியாக மாற்ற வேண்டும். எங்கள் நிறுவனம் சார்பில் சென்னையில் உள்ள பொது கழிவறைகளை பராமரிக்க அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம். அனுமதி கிடைத்தால் அவற்றை நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் கழிவறை போல் மாற்றுவோம்' என்றார் ஜேசுதாஸ்.

சுத்தமாக பராமரிப்பது எப்படி?

கழிவறையின் பிளஷில் பிளஷ் மேட் போட்டு வைத்தால் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். கழிவறையில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஓடோனில் பேக் வைக்க மறக்க வேண்டாம். டவலும், டிஸ்ï பேப்பரும் இருக்க வேண்டும்.வீட்டில் எல்லோரும் குளித்த பிறகு கழிவறையின் சல்லடையில் இருக்கும் முடிகளை அகற்றிவிட்டாலே கழிவறை சுசுத்தமாவது தவிர்க்கப்படும். அங்கும் ஒரு நாப்தலின் பால் போட்டு வைக்க லாம். சின்ன சின்ன பூச்சிகள் சேராமல் அடிக்கடி சுத்தம் செய்யவும் கழிவறை எப்போதும் ஈரப்பதமாக இருப்பதை தவிர்க்கவும். கழிவறையை கூட என் கழிவறை (மை டாய்லட்) என்று நினைத்து கிளீனரை பயன்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கழிவறைகளை 3 நாட்களுக்கு ஒரு முறையாவது நன்றாக தேய்த்து கழுவி விட வேண்டும். டாய்லெட் க்ளீனர் கொண்டு கழிவறையை சுத்தம் செய்யவும். கழிவறையை சுத்தம் செய்யும் பொழுது கைகளுக்கு உறை போட்டுக் கொள்ளவும். மூக்கு பகுதியை மறைக்கும் விதத்தில் முகத்தை துணி வைத்து கட்டிக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. கழி வறைகளை சுத் தம் செய்ய ஆசிட் பயன்படுத்தினால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் 100 சதவீதம் அழிந்து விடும். தொற்று நோய் பரவுவதில் இருந்து தப்பி விடலாம். கழிவறைகளை எப்போதும் ஈரப்பதமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தைகளின் சுகாதாரம் குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை செயல்களாகும்.

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக் கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கும் வயது வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. 4 மாதத்திலேயே இவ்வேலையை தொடங்கி விடும் பெற்றோர்களும் உண்டு. சிலர் எட்டு மாதத்திலும் சில பெற்றோர் ஒரு வருடம் முடிந்தவுனேயும் குழந்தைகளின் கழிவு நீக்க நடத்தையை நெறிப்படுத்தத் துவங்குகின்றனர்.

ஆனால் 18 மாதங்கள் முடிந்தவுடன் இப் பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத்துவங்குவது பொருத்தமானதாகும். கழிவறை பழக்கத்தை கற்றுக் கொடுப் பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளு மையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத் தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்ளும் பெற்றோர், பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர். மிதமிஞ்சிய கண்டிப்பு சிறந்த ஆளுமையை உருவாக்காது. குழந்தையின் கழிவறையை பழக்கத்தை நெறிப் படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவ ணைப்புடனும், அதே சமயத்தில் நல்ல பழக்கங்களை உரு வாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளும், பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள் வண்ணமயமான அறை கறைபடிந்த கழிவறை, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமில்லாத சூழ்நிலை, கழிவறையை சரியாக சுத்தம் செய்யாதது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு கழிவறைக்குச் செல்வது என்றாலே பயம் தொற்றிக் கொள்கிறது.

முக்கியமாக கலர்புல்லான நிறங்கள் குழந்தைகளை ரொம்பவே கவரும். எனவே உங்கள் வீட்டு டாய்லெட்டை பளிச் நிறங்களில் பெயிண்ட் செய்யுங் கள். சில கார்ட்டூன் கேரக்டர்களைக் கூட அங்கே ஒட்டி வைக்கலாம். இதன் காரணமாக பல சமயங்களில் குழந்தைகள் கழிவறைக்குச் செல்லாம லேயே உடைகளைக் கறையாக்கிக் கொள்கின்றன. எனவே கறைகள் இல்லாத, சுத்தமான பாத்ரூம் இருந்தால் மட்டுமே பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கழிவறையைப் பயன்படுத்தும் பயிற்சியை அளிக்க முடியும்.

61 சதவீதம் பேரிடம் இல்லை ! இந்தியாவில் 61 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை. தமிழகத்தை பொறுத்த வரையில் 57 சதவீதம் பேருக்கு இந்த வசதி இல்லை. `மை டாய்லட் கிளீனர்' நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் நகர்ப்புறங்களில் 40 சதவீதம் மேற்கத்திய கழிவறைகள் பயன் படுத்தப்படுவதால் சுகாதாரம் நன்றாக காக்கப் படுகிறது. மீதமுள்ள கழிவறைகள் டாய்லட் கிளீனர் பயன்படுத்தப்படாததால் கிருமிகள் இருக்கும் பகுதியாக உள்ளது.

கிராமப்புறங்களில் 80 சதவீதம் கழிவறை களில் கிருமிகளை அழிக்கும் கிளீனர் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு திறந்த வெளிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அடிக்கடி தொற்று நோய்களில் சிக்கி அவதிப் படுகிறார்கள் என்கிறார் ஜேசுதாஸ்.கழிவறை சுகாதாரம் பற்றி அறிய 9715777777 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க