படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தவிர்ந்து கொள்ளுங்கள்

தவிர்ந்து கொள்ளுங்கள்
இன்றைய உலகில் மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்பமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன. காட்டுக்குள் அழைந்து திரிந்த மனிதன் அல்லாஹ் அவனுக்கு கொடுத்த அறிவு என்ற அருட்கொடையால் தன் வாழ்க்கை தரத்தை மாற்றியுள்ளான். ஒரு காலத்தில் கால்நடையாக தன்னுடைய பயணத்தை துவங்கிய மனிதன் சக்கரம் மோட்டார் வாகனம் விமானம் அதையும் தாண்டி இன்று விண்வெளியை வலம்வரக்கூடிய விண்கலம் வரை கண்டறிந்துள்ளான். ஒரு காலத்தில் மரங்களிலும் குகைகளிலும் வீடுகளை அமைத்து கொண்டவன் இன்று பல அடுக்கு மாடி கட்டிடம் நீருக்குள் கட்டிடம் செயற்கை தீவு இன்னும் ஒரு படி மேலே சென்று விண்வெளியில் ஆய்வுக் கூடம் என்ற பெயரில் விண்வெளி வீடு. இதற்கெல்லாம் காரணம் அளவற்ற அருளாளன் அருளிய அறிவு என்ற அருட்கொடை தான். இத்தகைய நாகரீகமானவனாக உருவாகியிருக்கும்  மனிதனின் மாற்றங்கள் அவனுடைய வாழ்க்கை ஒழுக்கங்களில் பிரதிப­க்கின்றதா ? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதை தவிர வேறெதும் இல்லை. கற்காலத்தில் இருந்த திருட்டு விபச்சாரம் கொலை கொள்ளை தான் இன்றைய காலத்தில் அதிலேயும் நாகரீகமாக நடந்து வருவதை பார்க்கிறோம். அவைகளில் மிகப்பெரியளவில் மனித தன்மைமையும் ஒழுங்குகளையும் பாதிக்கும் தீமைதான் இந்த விபச்சாரம். அதிலேயும் நம்முடைய சமூகத்திலேயும் இந்த ஒழுக்கக்கேடுகள் அதிகமாக பரவிவருகின்றன. காதலர்கள் விபச்சாரம் என்ற நிலையை கடந்து குடும்பபெண்களும் விபச்சாரத்தில் மூழ்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்­ம்கள் வசிக்க கூடிய ஊர்களில் மூன்று மாதங்களுக்கு இருபது என்ற வீதத்தில் இந்த அவலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்க அவர்களை விட்டுவிட்டு அற்ப சுகத்திற்காக ஓடுவது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது. ஒழுக்க நியதிகளை பற்றி அறியாத மிருகங்கள் கூட குட்டிகளை தவிக்கவிடாது.  இது போன்ற ஒழுக்கேடுகள் பரவிவருகின்ற சமயத்தில் அதனை தடுத்து நிறுத்துவது நம்முடைய முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு அழிவு நிச்சயம்தான்.
அல்லாஹ் கூறுகிறான்:
மக்கள் தாங்கள் செய்த செயலுக்காக தான் கட­லும் நிலத்திலும் அழிவு ஏற்படுகிறது. இதனால் மக்கள் திருந்துவதற்காக அல்லாஹ் அவர்கள் செய்ததவைகளை உணர்ந்து கொள்ள செய்கிறான்.
(அல் குர்ஆன் 30:41)
சமீப காலங்களாக பூகம்பம் சுனாமி உயிர்கொல்­ நோய்கள் போன்ற பேரழிவுகளை உலகில் கண்டு வருகிறோம். இந்த அழிவுகள் தீமைகள் செய்வதர்களை மட்டும் அழிக்கவில்லை. நல்லவர்களையும் சேர்த்து தான் அழித்தன. எனவே தீமையை தடுக்காவிட்டாலும் அந்த அழிவுகளால் நாமும் தண்டிக்கப்படுவோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகிய உதாரணத்தை நமக்கு கூறுகிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
அல்லாஹ்வின் வரம்புகளை பேணுபவர்களுக்கும் அதை மீறுபவர்களுக்கும் உதாரணம் ஒரு கப்ப­ல் பயணிப்பவர்களை போன்று அவர்களில் சிலர் அந்த கப்ப­ன் மேல்புறத்தில் மற்றவர்கள் கீழ்புறத்திலும் இருந்தார்கள். கீழ்புறத்திலுள்ளவர்கள் தண்ணீர் எடுக்க செல்லும் போது மேல்புறத்திலுள்ளவர்களை கடந்து செல்வார்கள். அந்நேரத்தில் நம்முடைய இடத்தில் (நீருக்காக) துளையிட்டு நமக்கு மேலுள்ளவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கலாமே? என்று கூறினார்கள். மேலுள்ளவர்கள் கீழுள்ளவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்கள் அனைவரும் கட­ல் மூழ்குவார்கள். அவர்கள் அவர்களை தடுத்தால் அவர்கள் தப்பிப்பார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் இப்னு பஷீர் (ர­)
ஆதாரம் : புகாரி 2493 2686
எனவே தீமையை தடுக்காவிட்டாலும் நாமும் தீயவர்களுடன் அழிந்து போகக்கூடிய சூழ்நிலை தான் ஏற்படும்
இதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் புற்ற நோயை போன்று ஊடுருவிவிட்ட சில ஷைத்தான்கள்
1.மினுமினுக்கும் ஆடைகளில் மூக்கை துளைக்குளைக்கும் சென்ட்களில் புர்காயின்றி தெருக்களில் உலாவருதல்
2. வீட்டிற்குள்ளே சினிமா சீரியல் ஆபாச படங்கள்
3. செல்ஃபோனிலும் நேரிலும் அந்நிய ஆண்களுடன் கொஞ்சி குழைந்து பேசுதல்
4.வீதிகளிலும்  வீட்டு வாயில்களிலும் ஆடைகளில் கவனமற்று பிற ஆண்கள் பார்வை படும் படி ஒழுக்கமற்று இருத்தல்.
. இது போன்ற ஷைத்தான்கள் தான் மூல காரணம். இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று நம்பிய நாம் இதனை அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன அடிப்படையில் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
1. மினுமினுக்கும் ஆடைகளில் மூக்கை துளைக்கும் சென்ட்களில் புர்காயின்றி தெருக்களில் உலாவருதல்.
இவ்வாறு ஆடையணிந்து மணம் பூசக்கூடியவர்களை இஸ்லாம் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த பெண் நறுமணம் பூசிக் கொண்டு ஒரு கூட்டத்தை கடந்து அவர்கள் அந்த வாடையை நுகர்வதற்காக செல்கிறாளோ அவள் விபச்சாரி
ஆதாரம் : நஸயீ 5036
இதனை நம்முடைய பெண்கள் தவறு என தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்கள். பிறரை
கவர்ந்திருக்கும் நறுமணத்தை பூசினால் விபச்சாரம் செய்யமாலே ஒரு பெண்ணுக்கு விபச்சாரி என்ற பட்டத்தை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
என்னுடைய சமுதாயத்தில் சில பெண்கள் வருவார்கள் அவர்கள் ஆடையணிந்தும் நிர்வாணிகளாக   இருப்பார்கள்( இறுக்கமாக மறை உறுப்புகள் தெரியுமாறு மெல்­ய ஆடையணிவது) பிறரை கவர்ந்திழுப்பார்கள். தானும் பிறரிடம் சறுகிவிடுவார்கள். அவர்களின் தலைமுடிகளில் கழுத்து நீளமான ஒட்டகத்தின் திமில்களை போல இருக்கும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்.
அதன் வாடை மிக வெகு தொலைவில் இருக்கும்.
ஆதாரம் : 3971 5098
ஆடைகளை அறைகுறையாக அணிவதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. பிறரை கவர்ந்திழுக்கும் வகையில் மினுமினுக்கும் ஆடை மெல்­ய ஆடைகளை அணிபவர்களுக்கும் சொர்க்கத்திலும் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையை நுகரவும் மாட்டார்கள். அதுபோல சில பெண்கள் புர்கா என்ற பெயரில் டைட் புர்காவை  அணியக்கூடிய கலாச்சாரம் பரவிவருகிறது. அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த எச்சரிக்கை. 1400 வருடங்களுக்கு முன்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன கருத்தை இன்றைக்கு அறிவியல் உலகம் ஒத்து கொள்கிறது. உலகில் நடைபெறுகின்ற கற்புழிப்புகளுக்கு  காரணம் இந்த ஆடை தான் என்று அனைத்து நாடுகளும் ஒருமித்து கூறுகிறது.
2. வீட்டிற்குள்ளே சினிமா சீரியல் ஆபாச படங்கள்
ஒரு காலத்தில் டி.வி யை அதிசயமாக பார்த்த நாம். இன்று டி.வி தொடங்கி செல்ஃபோனில் இன்டர்நெட் வரைக்கும் சென்றுவிட்டார்கள். விளைவு ஒரு வீட்டில் தாயும் பிள்ளைகளும் சேர்ந்து பார்க்கமுடியாத ஆபாச காட்சிகளை சினிமா நாடகங்கள் என்ற பெயரில் பார்க்கிறார்கள் அதிலும் அவர்களுடைய பிள்ளைகள் செல்ஃபோனில் பாக்கெட் இன்டர்நெட் மூலம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள். இப்படி பசு மரத்தாணிபோல பதிந்து விட்ட இந்த நடைமுறைகளால் தூண்டப்பட்டு  தங்களுடைய நடைமுறையிலும் அதை பயிற்சித்து பார்த்துவிடுகிறார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். அது மிகவும் வெட்கக் கேடு மிகக் கெட்ட வழி
(அல் குர்ஆன் 17:32)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மனிதனுக்கு விபச்சாரத்தின் ஒரு பங்கை விதியாக்கிவிட்டான் . எந்த சந்தேகமுமில்லாமல் மனிதன் அதனை அடைந்தே தீருவேன். கண் செய்யும் விபச்சாரம் தவறனாதை பார்ப்பது. வாய் செய்யும் விபச்சாரம் தவறானதை பேசுவது. உள்ளம் ஆவல் கொண்டு மர்ம உறுப்பு அந்த விபச்சாரம் செய்வதை உண்மை படுத்துகிறது. அல்லது பொய்படுத்துகிறது.
ஆதாரம் : புகாரி 6243 6612
.
3. செல்ஃபோனிலும் நேரிலும் அந்நிய ஆண்களுடன் கொஞ்சி குழைந்து பேசுதல்
வயது வந்த பள்ளி கூடத்தில் படிக்கும் பெண்கள் செல்ஃபோனில் அந்நிய ஆண்களுடன் மணிக்ககனக்கில் குழைந்து பேசக்கூடிய கேடு கெட்ட கலாச்சாரத்தை காண்கிறோம். அது மட்டுமல்லாமல் கணவனை வெளிநாட்டில் வைத்து கொண்டு  ஆட்டோகாரன் கோழிகடை காரன் மீன்காரன் கொத்தனார் வளையல்காரன் என்று சம்பந்தமில்லாதவர்களிடம் வீட்டிற்கு வெளியிலும் வீட்டிற்குள்ளும் குழைந்து பேசும் அவலம் அரங்கேறியுள்ளது.
இது விபச்சாரத்திற்கு வசமான வாய்ப்பு
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
நபியின் மனைவிகளே நீங்கள் மற்ற பெண்களை போன்று இருக்காதீர்கள் . (அல்லாஹ்வை) பயந்தால் குழைந்து பேசாதீர்கள். யாருடைய உள்ளத்தில் (தவறான எண்ணம்) நோய் உள்ளதோ அவன் (விபச்சாரம் செய்வதற்கு) ஆவல் கொண்டுவிடுவான். (பேசினால்) குழையாமல் பேசுங்கள்.
(அல் குர்ஆன் 33:32)
அப்பழுக்கற்ற நமக்கெல்லாமல்லாம் தாய்மார்களான நபியின் மனைவிமார்களுக்கே இந்த எச்சரிக்கை என்றால் நாமென்ன அவர்களை விட பரிசுத்தவான்களா? சற்று சிந்தித்து பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்.
ஆதாரம் : திர்மிதி 1091
இப்படி தனித்திருப்பதும் விபச்சாரத்திற்கு காரணமாகிறது. இந்த பாவங்களை நாமும் தவிôந்து கொண்டு நம்முடைய பிள்ளைகளின் செல்ஃபோன் போன்ற நடவடிக்கைகளை கவனித்து அதைவிட்டும் அவர்களை தவிர்ந்து கொள்ள செய்ய வேண்டும். ஏனேன்றால் ஒருவன் விபச்சாரம் செய்யும் போது அல்லாஹ்வை நம்பியவானாக இருக்கமாட்டான் என்றே கூறுகிறார்கள்.
ஒருவன் விபச்சாரம் செய்யும் போது அல்லாஹ் நம்பியவனாக இருக்கமாட்டான்.
ஆதாரம் : புகாரி 2475 5578
இவை எல்லாவற்றிக்கும் முக்கியமான காரணம் வெளிநாடுகளில் உழைக்க சென்று தங்கள் மனைவிகளை கண்டுகொள்ளமால் இருக்கும் கணவன்மார்கள்தான். ஆயிரமயிரம் பணத்தை விட மறுஉலக வாழ்க்கையும் ஒழுக்குமுதான் என்று உறுதி கொண்டு வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.  அல்லாஹ் இந்த பெரும்பாவத்தி­ருந்து நம்மை காப்பானாக

செல்போன் எண்ணை மாற்றாமல், செல்போன்

செல்போன் எண்ணை மாற்றாமல், செல்போன் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி

டெல்லி:வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து விரும்பி செல்போன் நி்றுவன சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது இந்திய தொலைத் தொடர்புத் துறை.

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளும் இந்த வசதியை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது மத்திய தொலைத் தொடர்புத்துறை.

ஆனால், செல்போன் நிறுவனங்கள் பல, அதற்கான உயரிய தொழில்நுட்ப வசதி இல்லாமல் இருந்தன. எனவே, அவை அந்த வசதியைப் பெற கால நீட்டிப்பு செய்து கொண்டே இருந்தது மத்திய அரசும். இதுவரை கிட்டத்தட்ட 4 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்போதுதான் ஒருவழியாக அனைத்து செல்போன் நிறுவனங்கள் தங்களின் சேவையை நவீனப்படுத்தியுள்ளன.


நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக இது ஹரியாணாவில் மட்டும் அமலுக்கு வருகிறது.

குறித்த செல்போன் நிறுவனம் வழங்கும் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றாலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதையடுத்து, வேறு செல்போன் நிறுவனத்தின் சேவையில், ஏற்கெனவே இருக்கும் அதே செல்போன் எண்ணைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தது.

இதனை அறிமுகப்படுத்தும் பட்சத்தில்,வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு,கட்டணக் குறைப்பு உள்பட பல வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர்க்கவே பல நிறுவனங்கள் தாமதப்படுத்தி வந்தன என்பதுதான் இந்த சேவை இன்னும் வராமலிருக்கக் காரணம் என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள்.
 
source: thatstamil

புதுமடத்தை சுத்திபாக்கனும்மா?

                                               நம்மஊர் பஸ்தான் வரும் ஆனா (சிலசமயம்) வராது



நம்மஊர் தரவைதான் பலபேரிடம் பட்டா இருக்காம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனையில்தான் பிளாட் போடாமல் இருக்கு (புரம்போக்கு நிலத்தை பட்டாபோட பெரும் கூட்டம் தண்ணீர் வத்துவதற்காக காத்துகொண்டு இருக்கு)
பள்ளத்தை பத்தி கவலைபட வேண்டாம் விபத்து நடந்தால்108 ஆம்லன்ஸ் உடனேவருமாம்

நம்மஊர் ஆரம்பம் வந்து விட்டது அடையாளம் தெரியுதா? வாசனையும் சேர்ந்து வருதா?
நம்ம ஊர் ஆரம்பம் இதுதான் (ஆரம்பமே படு சூப்பரப்பா)

அடநம்மூர் பஸ்சு இந்த போஸ்ட்டை சுத்திதாங்க தினம் வேண்டுதல் செய்து(வேண்டுதல் பழிக்ககூடாதுண்டு நீங்க வேண்டிக்கிருங்க)
கவலைபடவேண்டாம் புதுசா இடம் வாங்கிவிட்டார்கள் சீக்கிரமே இடம் மாறிருவாங்க
இது எலக்ட்ரிக் பஸ்இல்லை, டீசல் பஸ்தான் (சரக்கு ஏத்திக்கிட்டு வர்ற லாரிக்குதானே பிரச்சனை எங்களுக்கு இல்லையிலே)
நம்ம கச்சி கொடி தான் கரண்ட் கம்பியில் சாயும் வரை அது அங்கேதான் இருக்கும்
இப்படி விழுந்தப்பவே கவலைபடலை இனிமேல் கவலை படவா அட போங்கப்பா
நம்ம பஸ்டான்ட்லே உள்ள போஸ்ட்டுதான் இதனால் கரண்ட் ஒன்னும் கட்ஆகாது
அட மழைநீர் சேகரிப்பு திட்டம் தான் ரோட்டில் சேகரிக்கிராங்க அவ்வளவுதான்






மத்திய அரசுக்கு சொந்தமானது கைவச்சா உள்ளே கொண்டுபோய் வச்சுருவாங்க அதான் யாரும் கைவக்கிறது இல்லை

சுதந்திரம் வாங்குவதற்கு ஒருநாள் முன்னாடி ஊன்டின டிரான்ஸ்பாமர் அதுதான் நினைவு சின்னம்மா வைத்து இருக்கிரார்கள்






இது நம்ம ”மஸ்ஜிதுார் ரஹ்மான்“ பள்ளிவாசல் பாதை இதாங்கா




பயப்படாதிங்க நம்ம ஊர்தான் goole earth ல எடுத்தது இல்லை நம்ம ஊர் மனராவில் இருந்து எடுத்ததுதான்










நம்ம ஊர் பெண்களை ஏமாத்தி கமிசன் அடிப்பாங்களே அந்த பேங்குதான் இது

அட இது எல்லாம் நம்ம ஊர்லை சகஜம்ங்க





துவக்கத்திற்கு வந்துட்டம் நினைக்காதீர்கள் முடிவும் அப்படிதான்







 
தொடரும்........       நன்றி!www .pudumadam news.com
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க