படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பெல்ஜியம் நாட்டில் ஜெயிலில் ஓரின சேர்க்கை ஜோடிக்கு திருமணம்

   நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.(15 .75)    

சிந்திக்கமாட்டீர்களா!!!


லாவென், பெல்ஜியம் நாட்டில் ஓரின சேர்க்கை ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இப்போது அங்குள்ள ஜெயில் ஒன்றிலேயே ஆண் ஓரின சேர்க்கை ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது.

பெல்ஜியம் ஜெயிலில் இருக்கும் ஆண்-பெண் கைதிகள் திருமணம் செய்ய ஏற்கனவே அனுமதி உள்ளது. இதன்படி ஏராளமான கைதிகள் திருமணம் செய்துள்ளனர். இப்போது முதல் முறையாக ஓரின சேர்க்கை திருமணம் நடந்துள்ளது. இங்குள்ள லாவென் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளி ஒருவரும் 3 கொலைகளை செய்து ஆயுள் தண்டனை பெற்ற ஒருவரும் இருந்தனர்.

இருவருக்கும் ஓரின சேர்க்கை தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக ஜெயில் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். அவர்கள் திருமணத்துக்கு அனுமதி கொடுத்தனர். இருவருக்கும் ஜெயில் வளாகத்தில் வைத்து திருமணம் நடந்தது. போதகர் ஒருவர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண ஜோடிகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் .
            ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் தான் தோன்றி தனமாக வாழும்போதும், கட்டுப்பாடு அற்று அனாசாரமான  காரியங்களில் ஈடுபடும்
போதும் அல்லாஹ் சில நேரங்களில் தனது தூதர்களின் வழியாக மக்களை நேர்வழி  படுத்தி இருக்கிறான் அதேபோல் சில நேரம் பல சமுதயத்தவரை தனது பெரும் அழிவுகள் மூலம் அழித்தும் காட்டியுள்ளான். தற்பொழுது இதுபோன்ற நிகழ்வுகளை இந்த உலகில் காணும் பொழுது அல்லாஹ் விடம் இருந்து பெரும் அழிவையும் கியாமத்து நாளையும் எதிர்பார்த்தவர்களாக நாம் இருக்கிறோம். 
இதுபோன்ற நிகழவுகளுக்கு சான்றாக லூத்து  நபி அவர்கள் காலத்தில் நடந்ததை அல்லாஹ் குர்ஆனில் அல்லாஹ் நமெக்கெல்லாம் ஒரு பாடமாக எடுத்து காட்டுகிறான்..........          இசை ஹராம் தவிர்க்க முடியாத காரணத்தினால் போடப்பட்டுள்ளது கருத்தை மட்டும்
எடுத்து கொள்ளவும்..                                                                                           தொடரும்........1
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க