படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மதுரையில் இளம்பெண்ணைக் கடத்திய இஸ்லாமியப் போராளிகள்(!)


              ””தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப் பாதைக்கு வழிவகுப்போம்” என்பது இது தானோ?

கடந்த 12.1.11 வியாழன் அன்று மதுரை மஹபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கடத்தியதாக மதுரை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் 29 வது வார்டு கிளைப் பொருளாளர் அல்லாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ துணைச் செயலாளர் பரக்கத், அந்தப் பகுதியின் எஸ்.டி.பி.ஐ செயல் வீரர் பாபு ஆகியோர் உட்பட நான்கு பேரை எஸ்.எஸ்.காலணி காவல்துறை கைது செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சமுதாயத்தைச் சீரழித்த பெண்களுக்கு தக்க பாடம் புகட்டவே அந்த பெண்ணைக் கடத்தியதாகக் கூறுகின்றனர் அந்த கொள்கை(?)வாதிகள். ஆட்டோவில் வைத்து கடத்திச் செல்லும் போதே என்னை படாத பாடுபடுத்தி விட்டார்கள் என்று கடத்தப்பட்ட பெண் காவல் நிலையத்தில் கூடுதலாகப் புகார் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கீழ்த்தரமான காரியங்களைச் செய்யும் போதெல்லாம் அதற்கு இப்படிச் சாயம் பூசுவது தான் இவர்களின் வாடிக்கை.
விபச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தக் கடத்தல் என்றால் கடத்திய பிறகு அந்தப் பெண்ணை என்ன செய்ய இருந்தார்கள்? கல்லெறிந்து கொல்ல இருந்தார்களா? அல்லது சினிமா கதாநாயகர்கள் வில்லனிடம் இருந்து கதாநாயகியைக் காப்பாற்றி அந்த வில்லன் செய்யாமல் விட்டதை பூர்த்தி செய்வாரே அது போல் செய்வதற்காக கடத்தினார்களா? இதையும் இந்தக் கும்பல் தெளிவுபடுத்துவது நல்லது.
தமிழகத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் தவறான வழியில் செல்லும் போது அவர்களை எச்சரிக்கை செய்ததை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் செய்த செயல் ஏற்கத்தக்கதல்ல என்ற போதும் அவர்கள் கூறுவதில் உண்மை இருந்ததாக தெரிந்தது.
ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அவர்களைக் கடத்தினோம் என்பதை மூளை உள்ள யாராலும் நம்ப முடியாது.
இந்தியாவில் அதுவும் தமிழகத்தில், அதுவும் மதுரை மாவட்டத்தில், அதுவும் மஹபூப்பாளையம் பகுதியில் மட்டும் தான் இது நடைபெறுகின்றதா? இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுவதுமாவது இந்தக் கொள்கை(?)க் கூட்டம் விபச்சாரம் செய்யும் விபச்சாரிகளைக் கடத்தாதது ஏன்? மதுரையைத் தவிர்த்த மற்ற ஊர்களில் அவர்கள் செய்யும் தொழிலில் இவர்களுக்குப் பங்குண்டு என்பதற்காகத் தான் மற்ற விபச்சாரிகளை கடத்தாமல் விட்டு வைத்துள்ளார்களா? நியாயமான நமது இந்த சந்தேகத்திற்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சமுதாயத்தைச் சீரழித்த பெண்களுக்கு தக்கபாடம் புகட்டவே அந்த பெண்ணைக் கடத்தியதாக இந்த எஸ்.டி.பி.ஐ கொள்கை(?)வியாதிகள் கூறிவரும் அதே நேரத்தில், எஸ்.டி.பி.ஐயின் அந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர் உட்பட மற்ற நால்வரும் அந்தப் பெண்ணை விலைபேசி விபச்சாரத்திர்கு அழைத்துச் செல்லும் வழியில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தான் இந்த கொள்கை(?) குன்றுகளை அந்தப் பெண் போலிசில் மாட்டிவிட்டு விட்டார் என்றும் பரவலாகப் பேசப்படுகின்றது.
அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப் பாதைக்கு வழிவகுப்போம்” என்ற இவர்களுடைய சுலோகத்தின் செயல்முறை விளக்கத்தை மக்களுக்கு விளங்க வைப்பதற்காகத் தான் இந்தக் கடத்தல் நிகழ்ச்சியோ என்ற சந்தேகம் நம் உள்ளத்தில் எழுகின்றது.
அத்தோடு மட்டுமல்லாமல், எஸ்.டி.பி.ஐயின் பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் செயல்வீரர்கள் இணைந்து கூட்டு முயற்சியில் இந்தக் கேடுகெட்ட வேலையைச் செய்திருப்பது நமக்கு மற்றொரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. “பசியிலிருந்து விடுதலை – பயத்திலிருந்து விடுதலை” என்று இவர்கள் தங்களது பேனர்களில் போடுகிறார்களே, இவர்கள் எந்தப் பசியிலிருந்தும், எந்த பயத்திலிருந்தும் விடுதலை பெற இந்தச் சமுதாயத்தை அழைக்கிறார்கள் என்பது தான் நமது அடுத்த சந்தேகம்.
கடத்தலில் ஈடுபட்ட இந்தக் கேடுகெட்டவர்களைப் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்தனர். கைது செய்த சம்பவம் மதுரையில் பரவ, கேவலப்பட்ட செயலில் ஈடுபட்ட இந்த தியாகிகளுக்கு(?) ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் முஹம்மது கொளஸ் களமிறங்கியுள்ளார். மாமா கட்சி என்ற தங்களது கட்சியின் பெயருக்கு தகுந்தாற்போல் இவர்களது நிலை இருப்பதில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. நாங்கள் தான் மாமா கட்சி என்பதை இவர்கள் நிரூபிக்க அருமையான சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வர வேண்டாம் என்று காவல்துறை இவர்களுக்கும், மற்ற எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளது.
மறு பக்கத்தில், பரையர் பேரவையினர் இந்தக் கேடுகெட்டவர்களை உடனே பிடித்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்தக் கொள்கைக் குன்றுகளைப் பற்றி சில விஷயங்களை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இவர்கள் எந்த ஒருபணியைக் கையில் எடுத்தாலும் அதில் தங்களது கேவல புத்தியைக் காட்டாமல் இருக்க மாட்டார்கள்.
முதலில் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிய வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். ஜனநாயகம் என்பது இணைவைத்தல் என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி,
“கண்டிக்கிறோம்; கண்டிக்கிறோம்;
அபூஜஹிலைக் கண்டிக்கிறோம்;
திரும்பிப்போ! திரும்பிப்போ!
அபூஜஹிலே திரும்பிப்போ!”
கோஷம் போட்டர்களா? என்றெல்லாம் கேட்டு நம்முடைய அறப் போராட்டங்களைக் கேலி செய்தார்கள்.
அதிலாவது அவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா?
எதையெல்லாம் இணைவைத்தல் என்று விமர்சித்தார்களோ அதை விடக் கேவலமான நிலைக்குச் சென்று “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பேனர்” வைக்கும் அளவுக்கு ஆகிவிட்டனர்.
அதைப் போல ஏழைகளுக்கு நாங்கள் தோல் பணத்தை வசூலிக்கின்றோம் என்ற பெயரில் வசூல் செய்து வாரிச் சுருட்டியதாகட்டும், பித்ராவை வசூலிக்கிறோம் என்ற பெயரில் ஏப்பம் விட்டதாகட்டும், 20பேர் படிக்கும் மதரஸாவிற்கு வசூல் செய்கின்றோம் என்ற பெயரில் நாடு முழுவதும் வசூல்வேட்டை நடத்தியதாகட்டும், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் பல லட்சங்களை வசூலித்து வாயில் போட்டதாகட்டும் இவர்களுடைய அத்தனை அத்தனை அஜண்டாக்களிலும் தாங்கள் கேடுகெட்டவர்கள் என்ற தனிமுத்திரை பதிக்க இவர்கள் தவறியதில்லை.
அந்த வழியில் தற்போது இந்த கொள்கைக் குன்றுகள் விபச்சாரத்தைத் தடுக்கப் போகின்றோம் என்ற பெயரில் புதிய அஜண்டாவைக் கையில் எடுத்துள்ளனர். இவர்கள் வழியில், ”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப் பாதைக்கு வழிவகுப்போம்” என்ற பாதையில் சமுதாயம் செல்லுமேயானால், தேசம் நமதாகாமல், மறுமையில் எரியும் நரக நெருப்பு தான் நமதாகும், இந்த வழிகேடர்கள் காட்டும் பாதை நரகப் பாதையாகத் தான் இருக்குமே தவிர, மாற்றுப் பாதையாக இருக்காது, இவர்களின் இந்த மாற்றுப் பாதை நரகப்பாதைக்குத் தான் வழிவகுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

                                                                                                                                                            
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க