படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மீடியாக்களும் முஸ்லிம் உலகமும் ......!

மீடியாக்களும் முஸ்லிம் உலகமும்





இன்றைய மீடியாக்களை ஒரு வரியில் சொல்லுதென்றால், ’கருப்பை வெள்ளையாகவும் வெள்ளையை கருப்பாகவும் சித்தரிக்கும் ஒரு ஊடகம்’!
கால் பந்து வீரர்களுக்கிடையில் சிக்குண்டு அங்கும் இங்கும் அடித்து உதைக்கப்படும் பந்துக்குச் சமமானவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
ஒரு முஸ்லிம் அல்லது முஸ்லிம் பெயர் தாங்கி, உண்மையை வாய் திறந்து பேசினால் அவனுக்கு உலக மீடியாக்கள் சூட்டும் பெயர் தீவிரவாதி.

உலக மீடியாக்களுக்கு இருக்கும் முக்கிய பணிகளில் ஒன்று உலக முஸ்லிம்களை தீவிர வாதிகளாக, சமூக விரோதிகளாக, பிரச்சினைகளின் ஆணி வேருகளாக சித்திரிப்பதாகும்.
இதுவே உலக மீடியாக்களுக்கும் முஸ்லிம் மீடியாக்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.முன்னால் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தனது நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ஆயும் ஏந்திய போது அவருக்குப் பெயர் முஸ்லிம் தீவிரவாதி,
சும்மா கிடந்த சதாம் ஹுசைனை உசுப்பிவிட்டு சொத்துக்களை பறித்து, உயிர்களை சூரயாடிய அமெரிக்காவுக்கு பெயர் சமாதான நீதிபதி.
முஸ்லிம்கள் அமைதியாக வாழும் பலஸ்தீன் பூமி துண்டாக்கப்படும் போது அதை தட்டிக்கேட்டு சிறு கற்களை ஆயுதமாக எடுத்த போது அவர்களுக்கு உலக மீடியாக்கள் சூட்டிய பெயர் முஸ்லிம் தீவிரவாதிகள்.
அதே பலஸ்தீன பூமியில் சண்டித்தனத்துடன் புகுந்து, நரி நாட்டியம் போட்டுக்கொண்டு நவீன ஆயுதம் ஏந்தி, இறத்த ஆற்றை ஓட்டும் யூதர்களுக்குப் பெயர் சுதந்திர போராளிகள்.
  1. இவர்களைத்தான் அல் குர்ஆன் இப்படி சொல்லுகிறது;
’நீங்கள் பூமியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் ’நாம் தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். (அல் குர்ஆன் 02 : 11)
உலகில் முஸ்லிம்கள் ஆயுத முனையில் பாதிக்கப்படுவதை விட மீடியாக்களினால் பாதிக்கப்படும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை பல இஸ்லாமிய நாடுகள், முஸ்லிம் அமைப்புக்கள் தெளீவாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

மாற்றங்கள் தேவை சார்பாக உலக முஸ்லிம்களுக்குச் சொல்வது...

ஆடம்பர வாழ்க்கை, அதிக வீண்விரயம் என்று நாட்களை கடத்தும் தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தனது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இன்று பாடசாலை மாணவர்கள் முதல் FAfaffபல் விழுந்த கிழவன் வரை பயன்படுத்தும்Facebook, gmail, yahoo, hotmail, tweeter, skype போன்ற அனைத்தும் நமக்குக் கிடைத்த இலவச ஊடகமே என்பதை கவனத்தில் கொண்டு அவைகளை பயன்படுத்தி எமது சமூகத்திற்குக் தேவையான செய்திகளை வழங்க முன்வர வேண்டும்.
ஆனால் (Facebook, gmail, yahoo, hotmail, tweeter, Skype) இவைகள் மூலம் சினிமாத்துறையை இலவசமாக விளம்பரப்படுத்துவதற்கும் தேவையற்ற ஆபாசங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதை பரவலாக பார்க்க முடிகிறது.
இந்த நிலை மாற்றப்படுவது எமது சமூகம் மீடியாவுக்கு செய்கின்ற மிக முக்கிய பணியாகும்.
வெள்ளி மேடைகள் முழுதும் இதை தலைப்பாகப் பேசி மக்கள் கருத்துக்களை பெற்று அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க கூட்டாக முன்வர வேண்டும்.
.

இஸ்லாமிய பிரச்சார நோக்கங்களை முன்னெடுக்கும் அமைப்புக்கள், குழுக்கள் நவீன மீடியாக்களை சிறந்த முறையில் கையாளும் பயன்படுத்தும் நிலைக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
சமூக சேவை நிருவனங்கள் தங்கள் செயற்திட்டங்களில் மீடியக்களின் பங்களிப்பை செலுத்துவதுடன் அதற்காக செலவிடுவதற்கும் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரிகள், பாடசாலைகளில் மீடியாக்களின் நிலை, இஸ்லாத்த்ற்கும் முஸ்லீம்களுக்கும் மீடியாவின் அவசியம், இன்றைய மீடியாக்களின் போக்கு குறித்து கருத்தறங்குகள், வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கலகங்களில் ஒவ்வொரு பீடங்களிலும் ஒவ்வொரு வருடங்களிலும் சமூக பிரச்சினைகளை தலைப்பாகக் கொண்டு பல ஆயுவுகள் கருத்துக் கணிப்பீடுகள் நடாத்தப்படுகின்றன,
அதனால் பல விஞ்ஞான, சமூகவியல் கருத்துக்களை மக்கள் மன்றங்களில் முன்வைக்கிறார்கள், ஆனால் இஸ்லாமிய அல்லது முஸ்லிம் பல்கலைக் கலகங்களில் இவ்வாறன செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே பின்பற்றப்படுகின்றன.
அண்மையில் ஒரு பல்கலைக்கலகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு;’ஒரு மனைவி எந்த வகையான முத்தத்தை தனது கனவரிடத்தில் எதிர்பார்க்கிறால்.?’
இதற்கான பல புதிய ஜோடுகளை சந்தித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு தங்கள் ஆய்வை சமர்பித்தார்கள்.
ஆனால் எமது பல்கலைக்கலக மாணவர்கள் கடைசி வகுப்பில் சமர்பிக்க வேண்டிய ஆய்வுக்கு முன்னைய வருட மாணவன் செய்த ஆய்வை பார்த்து எப்படியாவது கொப்பியடித்து சமர்பிப்பது, வெளிவருவது என்று தொடர்கிறது ஆய்வு தொடர்பான கதை.
இந்த நிலை மாறி சமூகத்திற்குத் தேவையான அன்றாடம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு ஆய்வுப் பொருளாக நினைத்து சமூகத்திற்கு பயனளிக்கும் நடவடிக்கைகளை கொடுக்க முன்வர வேண்டும். அநத ஆய்வுகளில் முஸ்லிம் மீடியாக்கள் பற்றிய தலைப்புக்கள் முதன்மையானதாக கவனத்தில் கொள்ள பட வேண்டும்.
முஸ்லிம் நாடுகளில் இருக்கும், இயங்கும் மீடியாக்கள் சர்வதேச மொழிகளில் சமூகத்திற்குத் தேவையான செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உலக நாடுகளில் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள், உரிமைகள் சேதப்படுத்தப்படும் போது அதன் யதார்த்த நிலையை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டுவருவதில் பாகுபாடு காட்டாது இருக்க வேண்டும்.
ஏகாதிபத்திய சார்பு கொள்கையை பின்பற்ற நினைக்கும் முஸ்லிம் நாடுகள் தம் மக்களையே காட்டிக்கொடுக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது.
கடைசியாக....
இதெல்லாம் புதிதல்ல, நாங்கள் இதெல்லாம் செய்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் தங்கள் முயற்சியின் விளைவு, பயன் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அப்போது தான் நாம் உலகில் தலை நிமிர்ந்து வாழும் சிறந்த சமூகமாக உருவெடுக்க முடியும்.
changesdo..நன்றி 
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க